Skip to main content

Posts

Showing posts from March, 2022

2. பேட்டி - பார்பரா லிடியா

    1959   ஆண்டு ஈரோட்டில் கொர்நெலியஸ் ஆலிஸ் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் திருமதி பார்பரா லிடியா. ஈரோடு வேளாளர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்து 1983 இல் கோவை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்தார். அதன் பின் 1998 வரை மூத்த வழக்கறிஞர் திரு. ஏ சி முத்துசாமியிடம்   இளநிலை வழக்கறிஞராக இருந்து தற்போது ஈரோட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். சுமார் 40 ஆண்டுகள் தொழில் அனுபவம் கொண்ட அவரை ஈரோட்டில் அவர் அலுவலகத்தில் சந்தித்து செய்த நேர்காணல் இது.   ....A.S. Krishnan, advocate, Erode.     1. இந்த வழக்கறிஞர் தொழிலை ஆண்கள் செய்வதற்கும் பெண்கள் செய்வதற்கும் என்ன வேறுபாடு ?   இந்த தொழில் இப்போதும் ஆண் மைய (male oriented) தொழில் தான், பெரும் பகுதியினர் ஆண்கள். ஒரு மூத்த வழக்கறிஞரிடம் பணியாற்றும் போது இளநிலை வழக்கறிஞர்களில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வாய்ப்பு பெறுவது இல்லை.   இதற்கு ஆண்களால் சுதந்திரமாக பல இடங்களுக்கு சென்று வர இயலும், இரவு நேரம் வரை அலுவலில் இருக்க இயலும் போன்ற காரணிகள் உண்டு. ஆக ஒப்புநோக்க பெண்கள் தொழிலாற்றுவது சற்று கட

3. When the parties to execution petition dies - நிறைவேற்று மனுவில் தரப்பினர் இறக்கும் போது

  ....Mohan Shankar, Advocate, Erode.   V. Uthirapathi Vs. Ashrab Ali and Ors.     Citation: AIR 1998 SC 1168 https://indiankanoon.org/doc/1243915/     வழக்கு வினா : உரிமையியல் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் ஒரு வழக்கமான நிறைவேற்று மனு நிலுவையில் உள்ள போது வென்ற தரப்பினரோ அல்லது தோற்ற கடன்தாராரோ இறந்துவிடுகிறார். இந்த சூழலில் 90 நாட்களுக்குள் இறந்தவரின் வாரிசுகளை சேர்க்க மனு செய்யவில்லை என்றால் இந்த நிறைவேற்று மனுவை தள்ளுபடி செய்யலாமா ?        உச்சநீதிமன்ற தீர்ப்பு :   Order 22 Rule 12, Nothing in Rules 3, 4 and 8 என்கிற பிரிவுகள் தீர்ப்புக்கு முன் ஏற்படும் நிகழ்வுகளை பொறுத்து பொருந்தும், ஆனால் நிறைவேற்று மனுவில் உள்ள நடைமுறைகளுக்கு இது பொருந்தாது.   விதி 12   தீர்ப்பு பெற்ற நபருக்கு சாதகமானது, தீர்ப்பு பெற்றவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகள் தன்னை பதிலியாக சேர்க்குமாறு விதி   2 இன்   கீழ் மனு செய்ய வேண்டியது இல்லை. அந்த மனுவை அந்த வாரிசுகளே தொடரலாம் அல்லது புதிய ஒரு நிறைவேற்று மனுவை தாக்கல் செய்யலாம்.   ஆக நிறைவேற்று மனு நிலுவையில் உள்ளபோது

4. Applicability of limitation

  Aarifaben Yunusubhai Patel and others vs Mukul Thakorebhai Ami & others.   .. Mohan Shankar, Advocate, Erode.   Citation:  2020 (2) MWN (Civil) 116   https://indiankanoon.org/doc/48527999/   Question of law : The legal issue involved is whether Section 5 is applicable to condone the delay in filing the petition under Order 21 Rule 90 of CPC and whether the time taken to pursue remedy before other courts can be excluded under Section 14 of Limitation Act?   Facts of the case: In this case, the defendants sustained a decree for recovery of Sum of Rs.1,89,94,105.50/- and they preferred appeal before the appellate court. But no stay was granted. In the meanwhile EP was filed by the decree holder on 02.11.2007 and receiver was also appointed to sell the property of the defendants. Pursuant to that. The properties were brought for auction on 26.11.2007 and the properties were successfully auctioned and the auction purchaser deposited 25 % of the sale amount.  

5. Complaint by public servant concerned - சம்பந்தப்பட்ட பொது ஊழியரின் புகார்

..... P.K. Chandran, advocate, Erode.   Karthi & ors vs state rep by bathalagundu ps   2022(1) MWN cr 246.     சட்ட பிரிவுகள் :     290, 291,186,188 r/w 192-A, 152,290,291 Ipc     வழக்கு சங்கதி:   எதிரிகள்   பொது இடத்தில்    விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் ஒரு ட்ராக்டர்   மீது விநாயகர் சிலையை வைத்து, அதில் மற்ற எதிரிகளை பயணிக்க வைத்தும், ஒலிபெருக்கி மூலம் சத்தத்துடன்   பாடல்களை   ஒலிபரப்பியும்   இடையூறு செய்துள்ளார்கள். காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டு உள்ளார்கள். முறையான ஆவணம் எதுவும்   இல்லாமல், அனுமதி பெறாமல்   டிராக்டர்   இயக்கப்பட்டு உள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் எதிரிகள்   மீது 290, 291,186,188 உடன் இணைந்த   192-A, 152,290,291 இத ச பிரிவுகளின்   கீழ் குற்ற   அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.     தீர்ப்பு : குவிமுச பிரிவு   195 இந்த படி சம்பந்தப்பட்ட பொது ஊழியர் தான் இ த ச 172 முதல் 182   வரையில் ஆன குற்றங்களுக்கு புகார் கொடுக்க தகுதியானவர், இதில் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர

6. Pre matured complaint - காலக்கெடு துவங்கும் முன் புகார்

... P.K. Chandran, Advocate, Erode.     2021 (1) MWN (Crl) DCC 79 V.G. Srinivasan     Vs   D. Srinivasalu   தீர்ப்பு வாசிக்க:  https://drive.google.com/file/d/1SPIIexpMVKeYsaQ3plFI7mihpXjfjOaZ/view?usp=sharing Act:    N.I. Act     Sec 138 (b), 142 (b)   வழக்கின் சாரம்சம்: காசோலை வழக்கில் வழக்கறிஞர் அறிவிப்பை எதிரிy பெற்றுக்கொண்ட பிறகு பணம் செலுத்த அவருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்து, பணம் செலுத்தாத பட்சத்தில் ஒரு மாதத்திற்குள் புகார் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் 15 நாட்கள் அவகாசம் முடிவதற்கு முன்பே புகார் தாக்கல் செய்யப்பட்ட படியால் வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என வாதிடப்பட்டது.   தீர்ப்பு:   புகாரானது   உரிய காலக்கெடுக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்ட படியால் வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என. ஆனால் அதே புகாரை மீண்டும் தாக்கல் செய்ய முடியாது. அதே வழக்கு மூலத்தில் புதியதாக புகார் தாக்கல் செய்யலாம் என்றும், காலக்கெடு முடிந்து இருந்தால் 142 (b)-ன்   படி தாமதத்தை மன்னிக்க மனு செய்யலாம் என உத்திரவிட்டது. இந்த தீர்ப்பு   நிலுவையில் உள்ள எல்லா வழக்கிற்கும் பொருந்

7. அம்பேத்கர் அரசியல் சாசன உரை

அம்பேத்கர் இந்திய அரசியல்யாப்பு மன்றத்தில் ஆற்றிய உரை 1949 -11-25 ______________________________________________________________________________       1950   ஜனவரி 26ம் திகதி இந்தியா ஒரு சுதந்திர நாடாகும். இனி அதன் சுதந்திரத்துக்கு என்ன நடக்கும் ?   அதன் சுதந்திரத்தை அது பேணிக்கொள்ளுமா ,   அல்லது திரும்பவும் அதை இழந்துவிடுமா ?   அதுவே என் உள்ளத்தில் எழும் முதலாவது எண்ணம். இந்தியா என்றுமே ஒரு சுதந்திர நாடாக விளங்கவில்லை என்று நான் கூற வரவில்லை. அது முன்னர் துய்த்த சுதந்திரத்தை ஒரு தடவை இழந்தது என்றுதான் கூற வருகிறேன். அது இரண்டாவது தடவையும் அதை இழந்துவிடுமா ?   எதிர்காலம் குறித்து என்னை மிகவும் பதைக்க வைக்கும் எண்ணம் இதுவே. முன்னரும் ஒரு தடவை இந்தியா அதன் சுதந்திரத்தை இழந்தது ;   அதன் சொந்தக் குடிமக்கள் சிலரின் வஞ்சகத்தாலும் ,   துரோகத்தாலுமே அதன் சுதந்திரத்தை அது இழந்தது ;   இதுவே என்னை மிகவும் மனங்குழம்ப வைக்கிறது. முகமது-பின்-கான் சிந்துப் புலத்தினுள் படையெடுத்து வந்தபொழுது அவரது   முகவர்களிடம் தகர் மன்னரின் சேனாபதிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு ,   தமது மன்னரின் பக்கம