Skip to main content

Posts

Showing posts from April, 2022

2. பேட்டி - ச.பாலமுருகன்

  1967 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பவானியில்   சண்முகம் நாகரத்தினம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பாலமுருகன். 1993 ஆம் ஆண்டு கோவையில் சட்டப்படிப்பு முடித்தார். பின் 6 ஆண்டுகள் மூத்த வழக்கறிஞர் ப பா மோகன் அவர்களிடம் இளநிலை வழக்கறிஞர் ஆக இருந்தார். மாணவ பருவத்தில் AISF இல் இருந்துள்ளார். தற்போது மக்கள் சிவில் உரிமை கழகத்தில் (PUCL) தேசிய செயலர், பழங்குடிகளுக்காக   செயல்பட்டவர், இடதுசாரி சிந்னையாளர். "சோளகர் தொட்டி" என்கிற இவரது நாவல் குறிப்பிடத்தக்கது. இரண்டு மகன்கள்   மனைவியுடன் கோவையில் வாழ்ந்து வருகிறார். கோவையில் அவரது அலுவலகத்தில் சந்தித்து செய்த நேர்காணல் இது.     ----- Krishnan, advocate, Erode.   வழக்கறிஞர் தொழில் :   1. முதல் 3 ஆண்டுகள் உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, உங்கள் திறனை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் ?   ஐந்து ஆண்டுகள் ப பா மோகன் இடம் பணியாற்றிய போது வகை வகையான வழக்குகளை பார்த்துள்ளேன். எனக்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஒரு வழக்கறிஞர் தன் கட்சிக்காரருக்கு உண்மையாக இருக்க வேண்டும், உங்களுக்கு வரும் வழக்கு ஒரு பெரும் பொறுப்ப

3. Creation of Easement right - வழியுரிமை உருவாக்கம்

.... Mohan Shankar, advocate, Erode Nallammal and another -Vs- Sengoda Gounder and others   https://www.google.com/amp/s/www.livelaw.in/amp/news-updates/madras-high-court-easement-right-cannot-be-created-by-parties-197194   சட்டம் : இந்திய வழியுரிமை சட்டம் 1882   வழக்கின் சாராம்சம் :   வாதி பிரதிவாதி கள் மீது நிரந்தர உறுத்துக் கட்டளை கோரி வழக்கு தாக்கல் செய்தார். வாதி தன் நிலத்துக்குள் பிரதிவாதிகள் வரக் கூடாது என உத்தரவிட கோரி இருந்தார். பிரதிவாதிகள் தங்களுக்கு வாதியின் நிலம் வழியாக வண்டித் தட வழியுரிமை உள்ளது என எதிர் வழக்காடினார்கள். வாதியின் வழக்கு தோற்றதால் உயர்நீதி மன்றத்தில் வாதி மேல் முறையீடு செய்தார்.   சர்வே எண் 88/1 பிரதிவாதியுடையது, இது வாதியின் நிலத்திற்கு அருகில் உள்ளது. இதற்கு செல்வதற்கு வாதியின் நிலம் அமைந்துள்ள சர்வே எண் 88/3 வழியாக எந்த உரிமையும் இல்லை. ஆனால் சர்வே எண் 88/3 ல் இரண்டு செண்டுகள் நிலத்தை பிரதிவாதிகள் வேறொருவரிடம் வாங்கினார்கள். இதை அடிப்படையாக வைத்து வாதி நிலம் வழியாக தங்கள் நிலத்திற்கு செல்ல அவசிய வழியுரிமை உள்ளது என பிரதிவாதிகள

4. Necessary parties to the Suit - அவசிய தரப்பினர்

  ... Mohan Shankar, advocate, Erode   K.Raju Vs Kuthalingam & others. 2022 (2) CTC 78 https://indiankanoon.org/doc/113369891/   சட்ட பிரிவுகள் : Order 1 Rule 10 (2) of CPC   இந்த வழக்கின் வினா என்னவென்றால் ஒரு பாகப் பிரிவினை வழக்கு நடைபெறும் போது சம்பந்தப் பட்ட சொத்தை ஒருவர் வாங்கினால் அந்த வழக்கில் அவரை தரப்பினராக சேர்க்க வேண்டுமா ?   வழக்கு சங்கதி : ஒருவர் தன் சகோதரர் மற்றும் கொழுந்தியாள் மீது ஒரு பாகப் பிரிவினை வழக்கு தாக்கல் செய்தார். சகோதரர் வழக்கு நிலுவையில் உள்ள போது தன் பாகத்தை இன்னொருவருக்கு விற்று விட்டார். அதை வாங்கியவர் தன்னையும் ஒரு தரப்பினராக அந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனக் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.   இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்கிறார். அதில் தான் ஒரு உண்மையான வாங்கிய நபர் என்றும், இந்த வழக்கு நிலுவையில் இருப்பது தெரியாமல் இந்த சொத்தை வாங்கியதாகவும் தன்னை சேர்க்காமல் இதில் ஒரு தீர்ப்பை வழங்க இயலாது எனவும் கூறுகிறார். 2013 (5) SCC 397 and 2015 (4) CTC 293 (DB) ஆகிய தீர்ப

5. Directions to Magistrates on Remands - நீதிமன்ற காவல் உத்தரவுக்கு வழிகாட்டு நெறிகள்

...A.S. Krishnan, advocate, Erode.   Arnesh Kumar vs State of Bihar 2014 8 Scc 273 https://indiankanoon.org/doc/2982624/   சட்ட பிரிவுகள்   : 41,41 A, 41(1)(b)(ii) குவிமுச, 4 வரதட்சணை தடுப்பு சட்டம், 498 A   இ த ச   வழக்கின் சாராம்சம்: மனைவி தன் கணவருக்கு எதிராக ஒரு வரதட்சணை கொடுமை புகாரை காவல் நிலையத்தில் அளித்து இருந்தார். இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருந்தது. கணவரின் முன் ஜாமீன் மனு முதலில் மாவட்ட நீதிமன்றத்திலும் பின்னர் உயர்   நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.   உச்சநீதிமன்ற தீர்ப்பு : உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரத்தை பார்வை இட்டதில் இதுபோல ஆண்டுக்கு 1.9 லட்சம் பேர் தேசம் முழுவதும் இந்த   வழக்குகளில்   கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் 15 % க்கு கீழ் தான் தண்டிக்கப்படுகிறார்கள். இதுதான் உள்ளதிலேயே தண்டனை சதவிகிதம் குறைவான வழக்கு வகை.   இ த ச 498 A என்கிற துன்புறுத்தல் பிரிவு ஒரு பெண்ணை அவரின் கணவர், மாமனார் மாமியார் துன்புறுத்துவதை தடுக்க ஏற்படுத்தப்பட்டது. ஆனால

6. Case and Counter case - வழக்கும் எதிர் வழக்கும்

..P.K. Chandran, advocate, Erode V. Subramanian and another vs State   2022 (2) MWN (Cr) 299 https://indiankanoon.org/doc/149645591/ சட்ட பிரிவுகள் : இதச   147, 148, 341, 294B, 321, 307, 302. காவல் நிலை ஆணைகள் எண். 588 A   வழக்கின் சாரம்சம்: வழக்கின் சம்பவத்தின் போது புகார்தாரும் எதிரிகளும் தாக்கிக் கொண்டார்கள் இதில் இருதரப்புக்கும் காயங்கள் ஏற்பட்டது. இரு தரப்பும் அளித்த புகாரை ஏற்று புகார்தார் தரப்பு மீது கீழமை நீதிமன்றம் விசாரிக்க தக்க வழக்கும், எதிரிகள் மீது இதச 147, 148, 341, 294B, 321, 307, 302   பிரிவுகளில் செஷன்ஸ்   வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கீழமை செஷன்ஸ் நீதிமன்றத்தில் எதிரிகள் 304(1), 323, 324 இ.த.ச. பரிவின் கீழ் தண்டிக்கப்பட்டார்கள். அதன் மீதான மேல்முறயீடு இது.   உயர் நீதிமன்ற தீர்ப்பு: எதிரிகள் கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கின் விவரத்தை அரசு தரப்பு இந்த வழக்கில் மறைத்து விட்டார்கள். சம்பவத்தின் போது எதிரிகளுக்கு ஏற்பட்ட காய விவரங்களையும் சிகிச்சை அளித்த மருத்துவரையும் விசாரிக்கவில்லை. காவல் நிலை ஆணை எண். 588 A வழக்கு மற்றும் எதிர் வழக்கு

7. இந்திய சுதந்திர நாள் உரை - நேரு

  இந்திய சுதந்திர நாள் உரை நேரு 1947-08-14 நெடுங்காலத்துக்கு முன்னர் நாங்கள் விதியுடன் உறவு பூண்டோம். அப்பொழுது நாம் பூண்ட உறுதியை முற்றுமுழுதாக அல்லவாயினும், மிகவும் கணிசமானளவு நிறைவேற்ற வேண்டிய காலம் கைகூடியுள்ளது. நள்ளிரவில் உலகம் உறங்க, இந்தியா உயிரும் சுதந்திரமும் பெற்று விழித்தெழப் போகின்றது. இது வரலாற்றில் மிகவும் அரிதாக எழும் தருணம்; நாங்கள் பழையதை விடுத்து, புதியதுள் அடியெடுத்து வைக்கும் தருணம்; ஒரு காலகட்டம் முடிவடையும் தருணம்; நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்து ஆன்மாவின் குரல் ஒலிக்கும் தருணம். பற்றுறுதிகமழும் இத்தருணத்தில் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும், இன்னும் பாரிய மானுட குறிக்கோளுக்கும் தொண்டாற்ற எங்களை நாங்கள் அர்ப்பணிக்க உறுதிபூணல் தகும். வரலாறு தொடங்கிய காலத்தில் இந்தியா அதன் தேடுதலில் இறங்கியது. முடிவிலாத தேடுதலின் தடம் பதியாமலேயே நூற்றாண்டுகள் கடந்தன. இந்தியாவின் போராட்டமும், அது ஈட்டிய வெற்றியின் மாட்சியும் தோல்விகளும் நிறைந்த நூற்றாண்டுகள் கழிந்தன. நற்பேறு, அவப்பேறு இரண்டையும் எதிர்கொண்ட வேளையிலும் தனது தேடுதலை இந்தியா கண்ணும் கருத்துமாய் ம

2. பேட்டி - விக்னேஷ் ஹரிஹரன்

  சென்னையில் 1999 ஆம் ஆண்டு ராஜகோபாலன், சீதா தம்பதிக்கு மகனாக பிறந்தார் விக்னேஷ் ஹரிஹரன். SSM உயர்நிலைப் பள்ளியில் மேல் நிலை கல்வி முடித்து, தற்போது தஞ்சாவூர் சாஸ்த்ரா கல்லூரியில் இறுதி ஆண்டு சட்டம் பயின்று வருகிறார். ஒரு பயணத்தில் மதுரையில் அவரை சந்தித்து செய்த நேர்காணல் இது. A S Krishnan, Advocate, Erode. 1. சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது ? அடிப்படையில் humanities and social sciences சார்ந்த ஆர்வம் பள்ளி நாட்களிலிருந்தே இருந்தது. ஆனால் வரலாறு, சமூகவியல் என்று ஒரு துறை சார்ந்து என்னை   குறுக்கிக்கொள்ள விருப்பமில்லை. தவிர அப்பாடங்களுக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே இவை அனைத்தும் கலந்த ஒரு காக்டெய்ல் பாடத்தை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது என் ஆங்கில ஆசிரியைதான் சட்டம் படிக்கும் யோசனையை வழங்கினார். சிறு வயதிலிருந்தே பேச்சுப் போட்டிகளில் ஆர்வமிருந்ததால் நானும் ஒப்புக்கொண்டேன். 2. கல்லூரி பாட திட்டத்துக்கும் நடைமுறை வழக்கறிஞர் தொழிலுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்கிற கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உண்மைதான். சட்டமும் நடைமுறையும் என்ற சொல