Skip to main content

Posts

2. பேட்டி - T. செந்தில் குமார்

    ஈரோடு சின்னியம் பாளையத்தில் 1969 ஆம் ஆண்டு   துளசிமணி செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த T. செந்தில் குமார், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் படிப்பும்   , பெங்களூரு BMS சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பும்   முடித்து 1992 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். 13 ஆண்டுகள்   மறைந்த   திரு சுந்தரம் அவர்களிடம் இளநிலை வழக்கறிஞர் ஆக பணியாற்றி தற்போது ஈரோட்டில்   மனைவி 2 மகன்களுடன் வாழ்ந்து வருகிறார் . இவர் தலைமுறை வழக்கறிஞரிடையே   குறிப்பிடத் தக்கவர், உரிமையியல் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரை ஈரோட்டில்   அவர் அலுவலகத்தில் செய்த நேர்காணல் இது.      ....A.S. Krishnan, Advocate, Erode          ...................   1.   முதல் 3 ஆண்டுகள் உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, உங்கள் திறனை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் ?     நான்   இளநிலை வழக்கறிஞராக சேர இரண்டு வாய்ப்புகள் இருந்தது. ஒன்று திரு A.C. முத்துசாமி அலுவலகம்,  ...

3. Witness without summons - அழைப்பாணை இன்றி சாட்சி விசாரணை

    .... Advocate Mohan Shankar, Erode.   Vidhyadhar vs Manikrao & Anr. Citation:   AIR 1999 SC 1441   https://indiankanoon.org/doc/1332419/   வழக்கின் வினா :   அழைப்பாணை இன்றி வந்த சாட்சியின் சாட்சியம் நம்பத் தகுந்ததா     சங்கதி : இந்த வழக்கில் வாதி இரண்டாம் பிரதிவாதியை ஒரு சாட்சியாக விசாரித்தார். அவர் வாதிக்கு ஒரு கிரயம் எழுதிக் கொடுத்ததையும் கிரையத் தொகை பெற்றதையும் ஒப்புக் கொண்டார், இந்த சாட்சியதின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுகிறது.   தீர்ப்பு: இரண்டாம் பிரதிவாதியை வாதி தனது சாட்சிப் பட்டியலில் காண்பிக்கவில்லை, அவருக்கு அழைப்பாணை அனுப்பவில்லை. மேலும் இவரை சாட்சியாக விசாரிக்க உரிய மனுவும் செய்யவில்லை. இதை சுட்டிக் காட்டி உயர்நீதிமன்றம் இவரின் சாட்சியம் குறித்து எதிர்மறையான முடிவை எடுத்தது.      உச்ச நீதிமன்றம் இந்த உயர்நீதிமன்ற கருத்து தவறு எனக் கூறியது. உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவு 16 சாட்சிக்கு அழைப்பாணை பற்றி கூறுகிறது. அதன் விதி 1 சாட்சி பட்டியல் பற்றி கூறுகிறது, விதி 1 A அ...

4. Property dispute in family court - குடும்ப நல நீதிமன்றத்தில் சொத்து வழக்கு

... Advocate Mohan Shankar, Erode. Chellam & others Vs N.Srinivasan and others Citation: 2022 (1) CTC 852   தீர்ப்பு வாசிக்க   வழக்கு வினா : குடும்ப உறவில் ஏற்பட்ட சொத்து வழக்கு குடும்ப நல நீதிமன்ற சட்டம் பிரிவு 7 இன் வரம்புக்குள் வருமா ?   சங்கதி:   கணவர் விவாகரத்து வேண்டி மனைவி மீது குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.   இதன் பிறகு உரிமையியல் நீதிமன்றத்தில் மனைவி குடும்ப சொத்துகளை பொறுத்து   உறுத்துக்கட்டளை உத்தரவு வேண்டி கணவர், கொழுந்தனார் மற்றும் மாமியார் மீது ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார். இதன் பின் கொழுந்தர் மேற்சொன்ன தன்   சகோதரர்   மனைவி மீது இது போல வேறு ஒரு உரிமையியல் வழக்கு தாக்கல் செய்கிறார்.   இந்த வழக்கு தொடுத்த மனைவியின் மாமனாருக்கு சொந்தமான சொத்து   என்பது இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.   இந்த இரண்டு வழக்குகளையும் விவாகரத்து வழக்கை விசாரிக்கும் குடும்பநல நீதிமன்றம் ஏற்கனவே உள்ள விவாகரத்து வழக்குடன்   சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும்   அதற்காக ...

5. Territorial jurisdiction in private complaint - தனிப் புகாரின் நிலவியல் வரம்பு

  .....Advocate  V .S . Senthil kumar , Chennai    Mani  Vs  Velkumar , Madras High Court  https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/732279   சட்ட பிரிவுகள் : 200   கு வி மு ச     வழக்கின் வினா : ஒரு குற்ற வழக்கை தனி நபர்   தாக்கல் செய்யும் போது   (Private complaint U/S 2oo Cr.P.C) அவ்வழக்கில் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த நீதிமன்றத்தின் நிலவியல் அதிகார வரம்புக்குள் வாசித்தல் .   வழக்கின் சாராம்சம்   : புகார்தாரர் தூத்துக்குடியில்   குற்றம் சாட்டப்   பட்டவர் மீது ஒரு அவதூறு வழக்கை ஒரு   தனிப் புகார் வழியாக தாக்கல் செய்கிறார் , குற்றம் சாட்டப்ப பட்டவர் தூத்துக்குடிக்கு வெளியே வசிக்கிறார் .        தீர்ப்பு : குற்றம் சாட்டப் பட்ட   நபர் தனது நீதிமன்ற அதிகார வரம்புக்கு வெளியே வசிப்பவர் என்றால் , அவர்மீது   தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு   அழைப்பாணை அனுப்புவத...